பங்களிப்பை நிறுத்திக் கொள்கிறேன்
உயிரோடு விளையாடும் மாற்று மருத்துவ மோசடி நூல்களை வெளியிட வேண்டாம் என்று ஏற்கனவே கருத்துரைத்தும் ( http://dev.freetamilebooks.com/ebooks/250 ), உடல் மொழி நூல் வெளியீட்டைக் காண அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து மாற்று மருத்துவ மோசடி நூல்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதால் இப்போக்கில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நூல் எப்படி ஒரு பல்கலைக்கழக பாடநூலாக இருக்கிறது, ஏன் விகடன் போன்ற ஊடகங்கள் இத்தகைய ஆட்களுக்கு வெளிச்சம் தருகிறார்கள் என்பதற்குப் பின் பல்வேறு அரசியல்கள் இருக்கின்றன. ஆனால், உயிரோடு விளையாடும் திட்டத்துக்கு என்னுடைய பகுத்தறிவுக்கும் படிப்பறிவுக்கும் எதிராக உள்ள இத்தகைய மோசடிகளைப் பரப்பும் திட்டத்துக்கு என்னால் பங்களிக்க முடியாது.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: மூளைச் சாவுகும் கோமா நிலைக்கும் உள்ள மருத்துவ வேறுபாட்டைக் கூட அறியாமல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து முறையாகச் சட்டத்துக்கு உட்பட்டு உறுப்புகளைப் பெறுவதை எல்லாம் தவறாகச் சித்தரித்து எழுதி இருக்கிறார்ஒ
மாற்று மருத்துவமே தவறு என்று சொல்லவில்லை. ஆனால், நவீன மருத்துவத்துக்கு இணையாக முறையான ஆய்வு, தரவுகளுடன் எழுத வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அதைப் பார்த்து மக்கள் வீட்டிலேயே பிரசவம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
https://en.wikipedia.org/wiki/Millennium_Development_Goals – இங்கு 4, 5 பாருங்கள். தாய் சேய் இறப்பைத் தடுப்பது, அவர்கள் நலம் என்பது 1900களில் பெருங்கனவு. நவீன மருத்துவம் வந்து தான் அதில் முன்னேற்றம்வந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம் பற்றி பயங்காட்டி வீட்டிலேயே மருத்துவம் பார்க்கத் தூண்டுகிறார்கள். இதில் எத்தனை பேர் செத்தார்கள் என்று தரவுஇல்லை. யார் பொறுப்பு?
பெங்களூரில் உள்ள படித்த பொறியாளர் ஒருவர். மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிப் போகாமல், scan பார்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்கிறார். ஒரு blade வைத்து இந்த மாதிரி psychoக்களைத் தான் இந்த மாற்று மருத்துவப் பரப்புரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனைக்குப் போனாலேயே காசு பிடுங்குவார்கள் என்று பயம் காட்டல். தொடர் ஊடகப் பயம் காட்டல். இவர்கள் எல்லாம் போய் சேருவது முறையாக மருத்துவம் பயிலாத போலிகளிடம் தான். இப்படி மாற்று மருத்துவத்தால் உயிருக்கு மோசமான நிலையில்
எத்தனைப் பேர் மீண்டும் நவீன மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாற்று மருத்துவர்கள் பாரதிராசா படத்தில் கிராமத்தைக் காட்டுவது போல் romaticஆக காட்டுகிறார்கள். ஆனால், நிலவரம் வேறு மாதிரி. இவர்களின் முதல் ஆயுதம் மருத்துவமனையில் காசு பிடுங்கிறார்கள் என்பதே. ஆனால், யாரும் இலவசமாக மருந்து கிடைக்கும் அரசு மருத்துவமனைக்குப் போங்கள் என்று சொல்வது இல்லை.
நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.
FreeTamilEbooks இல் எப்படிப்பட்ட நூல்களை வெளியிடலாம் என்பதற்கு ஒரு கொள்கை தேவை. குறிப்பாக, https://en.wikipedia.org/wiki/Wikipedia:General_disclaimer இங்கு கூறுவது போல்
Not professional advice
If you need specific advice (for example, medical, legal, financial or risk management), please seek a professional who is licensed or knowledgeable in that area.
என்பது போல் முதற்பக்கத்தில் கொட்டை எழுத்தில்
“இந்த நூலைப் படித்து மாற்று மருத்துவ முறையை முயன்று யாராவது செத்தால் அதற்கு FTE குழு பொறுப்பு இல்லை”
என்று போடுங்கள். அந்தத் துணிவு இல்லாவிட்டால், நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் மோசடிக்குத் துணை போவதே.
இது கருத்து வேறுபாடு அன்று. குடி, புகையை விட பல மடங்கு உயிருக்கு மோசமாக அமையும் அறம் தவறிய செயற்பாடு.
என்றாவது இப்படி ஒரு கொள்கை வந்தால் மீண்டும் பங்களிப்பதற்கு முனைகிறேன்.
மன்னிக்கவும் நண்பர்களே.
நன்றி.
- இரவி
இரவி 6:22 pm on September 18, 2015 Permalink | Log in to Reply
முதலில் இவர் மருத்துவர் தானா? நூலின் உள்ளே ஆங்கிலம் மருத்துவம் படித்ததாகப் போட்டிருக்கிறது. http://acuhome.org/?page_id=422 பக்கத்தில் அவர் படித்து வாங்கிய நவீன மருத்துவப் பட்டம் எதனையும் காணோம். எந்தக் கல்லூரியில் எந்த ஆண்டு MBBS முடித்தார்? அவர் படித்த இரத்தவியல் தொடர்பான பட்டப்படிப்பின் பெயர் என்ன? எந்தக் கல்லூரி? – இரவி
இரவி 6:24 pm on September 18, 2015 Permalink | Log in to Reply
சும்மா இருப்பதே சுகம் அத்தியாயத்தில் இப்படி எழுதி இருக்கிறார்>
“இந்த ஆழ்மயக்க நிலையை தற்காலத்தில் மூளைச்சாவு (Brain Death) என்றும் கூறுகிறார்கள் . கோமாவிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு கண்விழித்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் , தற்கால மருத்துவர்கள் மூளைச்சாவு என்று கூறி – அவர் உயிருடன் உள்ள போதே அவருடைய உள்ளுறுப்புக்களை அறுத்தெடுத்து தானமாகக் கொண்டு செல்கிறார்கள் . இப்போது – தன் உறுப்புக்கள் வெட்டப்பட்டதன் விளைவாய் உடல் உயிரை விடுகிறது. ”
difference between coma and brain death என்று தேடினால் கூகுளில் ஆய்வுகள் கொட்டுகின்றன. – இரவி
sivamurugan 8:04 pm on September 18, 2015 Permalink | Log in to Reply
What is the take on this are we planning to revert the published book until final decision in place?
இரவி 2:30 pm on September 19, 2015 Permalink | Log in to Reply
நூல் ஒரே நாளில் 2000 தரவிறக்கங்களைத் தாண்டி விட்டது. இத்தனைப் பேரின் நலனுக்கு யார் பொறுப்பு? பாரதி பதிப்பகம் வெளியிட்டது, பாடநூல் என்று நாம் பரப்புகிறோம். FreeTamilEbooks தளமே வெளியிட்டது என்று இன்னும் கூடுதலாகப் பரப்புவார்கள். அச்சு நூலாவது விற்றுத் தீர நாளாகும்.
Shrini 3:38 pm on September 23, 2015 Permalink | Log in to Reply
முதல் கட்டப் பணியாக மருத்துவப் பொறுப்புத் துறப்பை நூலிலும் தளத்திலும் சேர்க்கிறேன்.
http://freetamilebooks.com/medical-disclaimer/
https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:மருத்துவ_பொறுப்பு_துறப்பு_பக்கம்
https://ta.wikipedia.org/s/w99
இதை அடிப்படையாகக் கொண்டேன்.
இரவி 6:57 am on September 25, 2015 Permalink | Log in to Reply
சீனி,
பொறுப்புத் துறப்பைச் சேர்த்துள்ளதை வரவேற்கிறேன்.
இவ்வாறான பொறுப்புத் துறப்புகள் அட்டைப்படத்துக்கு அடுத்த பக்கத்திலேயே சேர்க்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெயர் போடுவதற்கு முன்பேயே இதனைக் காட்டுவதே வழக்கம். அப்போது தான் உரிய கவனத்தைப் பெறும்.
இது தொடர்பாக ஒரு நவீன மருத்துவர், சித்த மருத்துவரின் இருவரின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளோம். இருவருமே இவ்வாறான நூல்களின் உள்ள கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பரப்ப வேண்டாம் என்றே கூறியுள்ளார்கள்.
இந்நூல் வெளியிட்ட ஒரே வாரத்தில் இது வரை 3347 தரவிறக்கங்கள் கண்டுள்ளது. இதில் ஒரு குடும்பம் உண்மையற்ற வழிகாட்டல்களைப் பின்பற்றினாலும் ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் இந்நூலில் உள்ள கூற்றுகளை மெய்யறியும் வரை நூலை உடனடியாக நூலின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டுகிறேன்.
ஏனெனில், நாம் கேள்விகள் கேட்கவும் ஆசிரியர் பதில் அளிக்கவும் இன்னும் பல வாரங்கள் ஆகும். அதுவரை தகறான தகவலைப் பரப்பிக் கொண்டே இருந்தால் இன்னும் பலருக்கே ஆபத்தாக முடியும்.
அருள்கூர்ந்து இதனைத் தணிக்கையாகப் பார்க்க வேண்டாம். சாதி, சமயம் என்று பல துறைகளில் இணையத்தில் விசமக்கருத்துகள் பரப்பப்படுகின்றன. குறைந்தது, அவற்றை வயது வந்தவர் படித்துப் பகுத்தாய்ந்து தங்கள் நிலைப்பாட்டை எடுக்க முடியும். ஆனால், இதில் நிலைப்பாடு எடுக்க வாய்ப்பே இல்லாத குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.
இரவி 8:14 am on September 25, 2015 Permalink | Log in to Reply
ஆசிரியரிடம் சான்று தேவைப்படும் கேள்விகளை வரிசையாகத் தருகிறேன்.
கேள்வி 1: ஆசிரியர் அறிமுகம் பகுதியில் ஆங்கில மருத்துவத்தின் இரத்தவியல் துறையில் கல்வியையும் , பணியையும் துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். இப்படிப்பு குறித்த விவரங்கள் தேவை. எந்த ஆண்டு, எந்தக் கல்லூரி, என்ன படிப்பு, என்ன பட்டம்? எங்கு, எந்த ஆண்டு என்ன பொறுப்பில் பணியாற்றினார்?
இரவி 8:16 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 2: நஞ்சில்லா உணவு அத்தியாயத்தில் வைட்டமின் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் உட்கொள்வது வீண் என்கிறார். ஆனால், இவை பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள். இவை வேண்டாம் என்று கூறுவதற்கான முறையான மருத்து ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்ட வேண்டும்.
இரவி 8:19 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 3: பால் – உணவா? அத்தியாயத்தில் மாட்டுப் பால் குடிக்காதீர்கள் என்கிறார். உடம்புக்குத் தேவையான சத்துகளை உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் !
https://en.wikipedia.org/wiki/Malnutrition_in_India
பார்க்கவும். ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவின் மாபெரும் பிரச்சினை. பால், முட்டை போன்றவற்றை வாங்கித் திண்ண வசதியில்லாத இவர்களின் ஏன் இச்சத்துகளை உற்பத்தி செய்யவில்லை? இந்தியாவும் தமிழர்களும் ஊட்டச்சத்தில்லாமல் இருக்க வேண்டும், கர்ப்பிணிகள் பேறு காலத்தில் கூட ஊட்டச்சத்து மருந்துகளை உண்ணாமல் நோஞ்சான் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பது தான் ஆசிரியரின் நோக்கமா?
இரவி 8:27 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 4: சான்றோர்களும் சான்றுகளும் அத்தியாயம்.
// இன்றும் கூட , தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் மொத்தமாக இறந்த பின்புதான் அது செய்தியாக வெளிப்பட்டது . தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அங்கொன்றும் – இங்கொன்றுமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்படைந்துள்ளன . கிருமிக் கொள்கையிலேயே சந்தேகம் இருக்கும் போது , அவற்றைக் கொல்ல தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது சரியா ? //
என்று கேட்கிறார்.
தடுப்பூசி போட்டதால் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிற இலட்சக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவு தேவை.
தடுப்பூசியில் கோளாறு இருந்தால் அதற்கு தடுப்பூசி மருந்து நிறுவனமும் அரசும் பொறுப்பு. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
தடுப்பூசி போடாமல் இறக்கும் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்கிறார்கள்? ஆசிரியர் பொறுப்பேற்கிறாரா?
இரவி 8:33 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 5: சான்றோர்களும் சான்றுகளும் அத்தியாயம்.
AIDS நோயுக்கும் கிருமிக்கும் தொடர்பு இல்லை என்கிறார். இதற்கு 1980கள், 1990களில் வெளிவந்த காலாவதியான கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.
பகுத்தறிவு உள்ளவர்கள்
https://en.wikipedia.org/wiki/HIV/AIDS
படிக்கலாம்.
இந்தியாவில் இந்நோய் எவ்வளவு பெரிய பிரச்சினை என்று அறிய
https://en.wikipedia.org/wiki/HIV/AIDS_in_India
பார்க்கலாம்.
தொடர்ந்து இந்நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க பல பத்தாண்டு பரப்புரைகள் தேவைப்பட்டுள்ளன. இப்படிப் பொய்யான கருத்துகளைப் பரப்புவதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறார்?
AIDS நோய் எப்படிப் பரவுவதாக இவர் கருதுகிறார்? இந்நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கழிவையும் உடல் தானே அகற்றிக் கொள்ளுமா? சும்மா இருந்தால் போதுமா?
இந்தியா மக்கள் நலத்துறையில் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டு வருகிறதோ, எங்கெல்லாம் முன்னேற்றம் கண்டு வருகிறதோ அவற்றை எல்லாம் குறி வைத்து எதிர் பரப்புரை செய்வதன் நோக்கம் என்ன?
இதனையே ஏன் மக்கள் நலத்துக்கு எதிரான தீவிரவாத முயற்சியாகக் கருதக்கூடாது?
இரவி 8:39 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 6: கதை கதையாம் காரணமாம் அத்தியாயம்.
அம்மைகளில் பல வகை உண்டு. ஒட்டு மொத்தமாக எந்த அம்மைக்கும் மருந்து வேண்டாம், கிருமிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்கிறார்.
மனசாட்சி உள்ளவர்கள்
https://en.wikipedia.org/wiki/Smallpox
கட்டுரையில் உள்ள குழந்தைகளின் படங்களைப் பார்க்கலாம்.
After vaccination campaigns throughout the 19th and 20th centuries, the WHO certified the eradication of smallpox in 1979.[5] Smallpox is one of two infectious diseases to have been eradicated, the other being rinderpest, which was declared eradicated in 2011.
மக்கள் தடுப்பூசி போடாமல் விட்டு ஒழிக்கப்பட்ட நோய்கள் எல்லாம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் ஆசிரியரின் விருப்பமா?
இவ்வாறு மீண்டும் வந்த ஒரு நோயை இங்கு காணலாம் –
http://m.tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7664867.ece
இரவி 8:44 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 7 – தாகமும் – பசியும் தேவையைப் பொறுத்து! அத்தியாயம்
நீரைக் காய்ச்சினால் நீர் செத்து விடுகிறது. காய்ச்சாமல் மண் பானையில் வைத்துக் குடியுங்கள் என்கிறார்.
https://en.wikipedia.org/wiki/Waterborne_diseases
வந்தால் ஆசிரியர் பொறுப்பேற்கிறாரா?
The World Bank estimates 21% of communicable diseases in India are water related. Of these diseases, diarrhoea alone killed over 700,000 Indians in 1999 (estimated) – over 1,600 deaths each day. The highest mortality from diarrhoea is in children under the age of five, highlighting an urgent need for focused interventions to prevent diarrhoeal disease in this age group.
http://www.who.int/mediacentre/multimedia/2002/ind_sanitation/en/
இரவி 8:49 am on September 25, 2015 Permalink | Log in to Reply
கேள்வி 8 – சும்மா இருப்பதே சுகம் அத்தியாயம்
// ஆனாலும் நாம் சும்மா இருப்பதில்லை . மயக்கமுற்ற நிலையில் – தண்ணீரும் , சோடாவும் தெளித்து உடலை எழுப்ப முயற்சிக்கிறோம் . பின்பு , ரத்த நாளம் வழியே குளுக்கோசையும் . ரசாயன மருந்துகளையும் ஏற்றுகிறோம் . சாதாரண மயக்க நிலை – கழிவின் தீவிரத்தைப் பொறுத்து நோயெதிர்ப்பை கைவிட்டு உணர்வுகளாக திரும்பும் . அல்லது சாதாரண மயக்கம் – ஆழ்நிலை மயக்கமாக ( கோமா ) மாறி – நோயெதிர்ப்பை சத்தமின்றி நிகழ்த்தும் .
இப்போது தான் நம் டாக்டர் கூறுவார் – “ நோயாளி எப்போது கண்விழிப்பார் என்பதை உறுதியாக கூற முடியாது , அவர் எப்போது வேண்டுமானாலும் விழிக்கலாம் ! ” நாமும் இதை நம்பி மணிக்கணக்கில் – நாட்கணக்கில் – ஏன் மாதக் கணக்கில் கூட காத்திருக்கிறோம் . உடல் , தன் கழிவு வெளியேற்றத்தை மெல்ல மெல்ல முடித்துக் கொண்டு – பின்பு தான் நினைவு திரும்புகிறது .
இந்த ஆழ்மயக்க நிலையை தற்காலத்தில் மூளைச்சாவு (Brain Death) என்றும் கூறுகிறார்கள் . கோமாவிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு கண்விழித்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் , தற்கால மருத்துவர்கள் மூளைச்சாவு என்று கூறி – அவர் உயிருடன் உள்ள போதே அவருடைய உள்ளுறுப்புக்களை அறுத்தெடுத்து தானமாகக் கொண்டு செல்கிறார்கள் . இப்போது – தன் உறுப்புக்கள் வெட்டப்பட்டதன் விளைவாய் உடல் உயிரை விடுகிறது . //
உடலில் glucose ஏற்றுவது தவறு..
மருத்துவர்கள் உறுப்புகளை எடுத்து உயிரைக் கொல்கிறார்கள்….
போதும்.. இதற்கு மேலும் இந்த அபத்தக் களஞ்சியத்தைப் படிக்கும் தெம்பு இல்லை.
மேற்கண்ட கேள்விகளுக்கு ஆசிரியரின் பதில்களைப் பெறுங்கள்.
அதுவரை புத்தகத்தை வெளியிட்டுப் பரப்புவதை நிறுத்தி வையுங்கள்.
Acu Healer என்று சொல்லித் திரிகிற மொத்தக் கும்பலும் இதே கதைகளைத் தான் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். இதில் ஒவ்வொரு நூலாகப் படித்து ஆராய ஒன்றும் இல்லை.
கழிவே நோய் என்பதே இவர்கள் திரும்பத் திரும்ப அரைக்கும் மாவாக இருக்கிறது.
Shrini 12:24 am on September 26, 2015 Permalink | Log in to Reply
நூலை Private ஆக மாற்றி விட்டேன்.
பொது மக்கள் பார்க்க இயலாது.
விரைவில் கேள்விகளைத் தொகுத்து ஆசிரியருக்கு அனுப்புகிறேன்.
இரவி 7:53 am on September 26, 2015 Permalink | Log in to Reply
நடவடிக்கைக்கு நன்றி, சீனி.
Shrini 2:17 am on October 24, 2015 Permalink | Log in to Reply
உடலின் மொழி – சில கேள்விகள்
சமீபத்தில் உடலின் மொழி நூலை வெளியிட்டபோது, அதன் கருத்துகள் மீதான உண்மைத்தன்மைகள் பற்றிய விவாதம் எழுந்தது.
நூலை வாசித்துவிட்டு, எனது சந்தேகங்களை தொகுத்துள்ளேன்.
மக்கள் நலனை முன்னிட்டு நூலை தற்காலிகமாக நீக்கியுள்ளோம்.
ஆசிரியரிடமிருந்து தக்க பதில்கள் வந்தவுடன் மீண்டும் வெளியிடுதல் பற்றி தீர்மானிப்போம்.
கேள்விகளை இணைத்துள்ளேன்.
அன்வர்,
இவற்றை நூலாசிரியருக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
நன்றி
https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynT0JmQXY2QWxlZG85Y0FtXzAyZHk4V3JsZzJ3/view