நூல்களில் எழுத்துப் பிழைகள்

நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு சொக்கன் வேண்டியுள்ளார். பார்க்க – http://freetamilebooks.com/first-birthday-100-books/#comment-358 . நானும் பல நூல்களில் இந்தச் சிக்கலை உணர்ந்துள்ளேன். என்ன செய்யலாம்?

1. தன்னார்வலர்களைக் கொண்டு நூல்களைத் திருத்துவது என்பது மிகுந்த வேலைப்பளு தருவது என்பதால் இயலாத காரியம்.

2. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைப் பிறர் திருத்துவதை விரும்புவதில்லை. தொகுப்பாசிரியரின் பணி, எழுத்துப் பிழை திருத்தும் பணி சிக்கலானவை. மிகை திருத்தமாகவும் முடிந்து விடக்கூடும்.

எனவே,

எழுத்தாளர்கள் முதல் முறை தங்கள் நூல்களை அனுப்பி வைக்கும் போதே, மேலோட்டமாக ஒரு பார்வை இட்டு, எழுத்துப் பிழைகள் தென்பட்டால் நூலைத் திருப்பி அனுப்பி பிழைகள் திருத்தி அனுப்பக் கோரலாம். பிழைகள் திருத்துவதுடன், சுருக்கி எழுதுதல், மேம்பட எழுதுதல் ஆகியவற்றையும் கவனிக்குமாறு கோரலாம். இது அவர்களுக்கும் நல்லதே. என்னுடைய முதல் மின்னூலை வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து இடும் போது, சீராக்கி எழுதவே ஒரு நாள் ஆனது. தத்தம் எழுத்தை மீண்டும் படித்து சீராக்க நல்ல வாய்ப்பு. ஏனெனில், சில ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவையாக இருக்கும்.

(அல்லது)

தொழில்முறையாக இந்தச் சேவையை அளிப்பவர்களின் தொடர்பு விவரங்களைச் சேகரித்து எழுத்தாளர்களுக்குத் தரலாம். இலவச நூலுக்குக் காசு செலவழித்து யாரும் பிழை திருத்துவார்களா தெரியாது. ஆனால், தொழில்முறையாக செய்ய ஒரு வாய்ப்பு.

உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

நன்றி


Posted

in

by

Comments

One response to “நூல்களில் எழுத்துப் பிழைகள்”

  1. Jegadeeswaran Natarajan Avatar

    ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்று நடந்ததை அசைப்போட்டு, திருத்தங்கள் செய்வதைப் போல இப்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் சிந்தித்து இருக்கின்றீர்கள்.

    தனிப்பட்ட முறையில் அச்சகங்களால் அச்சடிக்கப்படும் நூல்களில் கூட எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அவர்கள் உரைதிருத்த தனி நபர்களை வைத்தும், சில பிழைகள் தவறுகின்ற வாய்ப்பு உள்ளது. அவ்வாறிருக்க தனிப்பட்ட ஒருவர் மட்டுமே எழுதும் நூலில் எழுத்துப்பிழைகள் சாத்தியமே. எழுதியவர் தவிற பிறர் படிக்கும் பொழுதே அத்தவறுகள் தென்படும். எனவே தன்னாவளர்களையும் தேடிப் பயணிப்போம். மேலும்.

    1) தொடக்க காலத்தில் வெளியிட்ட நூல்களின் குறிப்பு பக்கங்களில் அட்டைப்படம் இடம்பெறவில்லை. அதனை இணைக்க வேண்டும். உதாரணம்,. தங்களுடைய முதல் மின்னூல்,. தலைப்பும் தங்கள் பெயரும் இதில் இடம் பெறாத அட்டைப்படம் இருந்தாலும் குறிப்பில் இடம்பெறவில்லை. இவ்வாறு இருக்கும் பக்கங்களை புதுப்பிக்கலாம்.
    http://freetamilebooks.com/ebooks/tamil-indru/

    2) வெளியிடுவது தமிழ் நூல் என்றாலும், தலைப்பில் தமிழ் இல்லாமல் Free Tamil Ebooks என்றே பல இடங்கள் இத்திட்டம் பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதனை மாற்றுவது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கின்றனவா?

    3) எழுத்தாளர்கள் வாரீயாக நூல்களை தேடும் வசதி, இதுவரை நம் திட்டத்தில் எழுதியுள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் கொண்ட ஒரு பக்கம் என இணைக்கலாம்.

    4) தற்போதுள்ள நூல் வகைகளில் நுட்பம் மற்றும் ஆளுமைகளில் மிகக் குறைவான அளவே நூல்கள் உள்ளன. இது போன்ற நூல் வகைகளை அதிகம் செய்ய ஏதேனும் போட்டியொன்றை நடத்தலாமா?

    நன்றி!..

Leave a Reply